Monday, 21 September 2015

ஊடல்


வஞ்சியவள்  உனை நோக்கி
கெஞ்சிடினில் மறைந்திடதோ
விஞ்சிய  உன். கோபமெல்லாம்?
கஞ்சிதனை பருகிடாமல் நீ இருக்க
அஞ்சியவள் நோக்குகையில்
கொஞ்சியவள் கரம் பற்றி
மிஞ்சிய உன் காதலையே
நெஞ்சினிலே புதைக்காமல் நீயுரைக்க
எஞ்சிடுமோ ஊடலும்தான் உம்மிடையே?

1 comment: