அரிச்சுவடி முதல்
ஆன்றோர் பெருமைவரை
இலக்கியமும் இதிகாசமுமே
ஈங்கனே யாம் கற்றோம்.
உளமார்ந்த நட்பினையும்
ஊரார் போற்றிடும் பண்பையுமே
எண் எழுத்து பாட்டுடனே
ஏற்புடனே கற்றறிந்தோம்.
ஐயங்கள் ஏதுமின்றி - நாட்டினது ஒருமைப்பாட்டினையும் ஒன்றியுமே
ஒவாமுயற்ச்சியுடன் இவ்விடமே கற்றுணர்ந்தோம்.
ஔவியமும் தவறு என்றறிந்தோம்
அஃதனைத்தும் கற்பித்தது எம்பள்ளி.
No comments:
Post a Comment