Thursday 15 October 2015

பெருஞ்சோகம்


நந்திக்கடலருகே நடந்திட்ட பெருஞ்சோகம்
கத்திக்கத்தி நானழுதும் கரைந்திட்டில்லையென் துயரம்
புத்திகெட்ட காடையனே புதைந்திடவில்லையென் சமூகம்
முந்தியேதான் பெற்றிடுவாய் - நீயே விதைத்திட்ட உன் முடிவை
பொத்தி பொத்தி எம் பெண்டிர்
காத்திட்ட கற்பதனை
பந்தியிலே வைத்தேதான்
சுமந்திட்டாய்  பாவந்தனை
சுத்தி சுத்தியே நீ வந்தாலும்
கரைந்திடாதடா உன் ஊழ்வினையும்
தத்தி தத்தி நடை பயிலும்
தளிர்களாம் எம்மக்கள்
சிந்திய தம் முன்னோரின்
குருதியிலே மறம் வளர்த்து
குத்தியுனை கொன்றிடுவார்
கொத்திடுமே கழுகினமும் வல்லூரும் !

No comments:

Post a Comment