Monday 21 September 2015

சிவனே....


பஞ்சு திரியிட்டு
நெஞ்சுருக வேண்டினரே
தஞ்சமென்றே வந்தார்
உன்னை 
நஞ்சுண்ட ஈஸ்வரனே
கெஞ்சுதலை செவிமடுத்தே
அஞ்சுதலை போக்கிடுவாய்  யாம்
அஞ்சுகின்ற அரவந்தனை
நெஞ்சுமீதணிந்தவனே 
பஞ்சபூத வடிவினனே
கொஞ்சுமுகம் காட்டாயோ? பிஞ்சுமன
பக்தனையே.கொஞ்சமும் நீ
நோக்காயோ ?

1 comment:

  1. எதுகை மோனை சூப்பர்..போட்டில கலந்துக்குங்க...மற்றவர்கள் பதிவ பார்த்து கமெண்ட் கொடுத்தால் தான் நம்ம பதிவ பார்ப்பாக...பாருங்க..என் பதிவு நிறைய பேர் வருவாக ...சைட்ல...பாருங்க...

    ReplyDelete