Tuesday 22 September 2015

என்னவனே




தனித்திருந்தேன்
      துணையாய் வந்தாய்
களைத்திருந்தே்ன்
.      உற்சாகம் தந்தாய்
பசித்திருந்தே்ன்
.       உணவளித்தாய்
துவண்டிருந்தேன்
.        தோள்கொடுத்தாய்
கனவுகள் கண்டேன்
.         நினைவுகளாக்கினாய்
காதல்க்கொண்டென்
.          மனைவியாய்  ஏற்றாய்
மோகம் கொண்டேன்
.           தாகம் தீர்த்தாய்
கரு சுமந்தேன்
.            எனையே சுமந்தாய்
வலியென்றென்
.             உயிர் துடித்தாய்
பெற்றெடுத்தேன்
.              பூரித்து நின்றாய்
மகளென்றேன் - இல்லை
.               தாய் என்றாய்.
அவள் வரவும்
.               என்னை ஏன் மறந்தாய்?



No comments:

Post a Comment