Tuesday 22 September 2015

ஆதியே அய்யனே !



ஆதியாம் ஆதவனே !
கிழப்பருவமேதான் எய்தினையோ?
நீரிழிவு நோயுமேதான்
உன்னையுமே  தாக்கிற்றோ?
புவி ஈரமெல்லாம் உறுஞ்சுகிறாயே 
பாவம் பூமித்தாய் தவிக்கின்றாள்!
உன் தாகம் தீர்த்திடவே
பனிப்பாறைகளை நாடியேதான்
ஓடுகிறாள்.
உன் வேகம் தாளாது பிரிந்து அவள் வந்தமைக்கு
நீ தந்திடும் தண்டனையோ இச்செயலும் ?
பூமித்தாய் ஈன்றெடுத்தாள் மக்களினம் :
காத்திடவே தவிக்கின்றாள் தன் பிள்ளைகளை ;
உன் கருணை பார்வை அதுவன்றோ?
அவள் தவிப்பதனை ஆற்றிவிடும் அருமருந்து.

No comments:

Post a Comment