Tuesday 22 September 2015

காலம் கடந்த புலம்பல்



சேலை தலைப்பொதுக்கி 
முலை சுரந்த பாலூட்டி
தலை கோதி சீராட்டி
மலை போன்ற துயர் வரினும்
சளைக்காது துணை நின்று
இணை தேடும் பருவத்தே
தினையளவும் உன் நினைவற்று - மாறன்
கனையதனில் மதி மயங்கி
எனையே நான் மறந்திருக்க
பனை போலும் பொறுமையுடன்
சுனை போன்ற உன் அன்பாலே
நினைத்த என் காதலையே - வாழ்க்கை
துணையாக்கிய என் தாயே!
நினைவற்று நீ கிடக்க
உனைக்காண நான் வருகையிலே
கண்ணை. மூடிய உன் நீள்துயில் என்
வினைப்பயனோ?
உனையே நான் பே ணிடவே
எனையும் நீ மன்னித்து
என் மகளாய். வந்திடம்மா
எனையும் நீ ஏற்றிடம்மா !

1 comment: