Monday 14 September 2015

அம்மா
**********************
அன்புள்ள அம்மா நீ
ஆக்கிவைத்த உன் கைமணத்தை
இலையதனில் பரிமாற
ஈக்களென பறந்து வந்தோம்
உன் சுகத்தை பேணாமல்
ஊண் உறக்கம் பாராமல்
எங்களின் வாழ்வதனில்
ஏற்றங்கள் பெறச் செய்தாய்
ஐம்பது அகவையை கடந்திட்டும்
ஒருநாளும் எம்முன்னே
ஓய்ந்ததில்லை  ஒருகணமும்
ஔடதமும்  கண்டதில்லை
 அஃ தாமே என் அன்னை

4 comments:

  1. அகர வரிசையில் அம்மா கவிதை நன்று..வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. வலையுலத்திற்கு வருக... வருக...

    வாழ்த்துகள்... நன்றி...

    ReplyDelete
  3. வணக்கம்...

    தங்களின் வருகைப் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றிகள்...

    visit and check : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

    how is it ...? excited...? put a comment... thank you...

    அன்புடன்
    பொன்.தனபாலன்
    9944345233

    ReplyDelete
  4. Thank you Dhanapalan. I'll definitely visit your blog and leave comments as well.

    ReplyDelete